Friday, December 28, 2007

இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோ

உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ!
47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள்.



அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போய் ஓய்ந்துவிட்டது.

உடல்நிலை ஒத்துழைக்காததால், அரசு நிர்வாகத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்துள்ளார் காஸ்ட்ரோ. அமெரிக்க அரசு வெடி வெடித்துக் கொண்டாடாத குறைதான்!

உலகமே கொண்டாடும் புரட்சி நாயகன் சே குவேரா, தன் தலைவனாகக் கொண்டாடிய காஸ்ட்ரோ, ஒரு 'நல்ல சர்வாதிகாரி'. பொதுவாக உலகப் புரட்சியாளர்களை வார்த்தெடுக்கும் வறுமைச் சூழல் காஸ்ட்ரோவுக்கு வாய்க்கவில்லை. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவருக்கு, வாழ்க்கையின் சோகங்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இளம்வயதில் இல்லை. பாடிஸ்டாவின் சர்வ நாச அதிகாரப் பிடியில் கியூபா சிக்கித் தவித்துக்கொண்டு இருந்த சமயத்தில், கல்லூரி மாணவர் இயக்கங்களில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார் காஸ்ட்ரோ. தன் நண்பர்கள் வறுமையில் வாடித் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டார். அதன் பிறகுதான் காஸ்ட்ரோவின் கால்கள் மெள்ள மெள்ள புரட்சிப் பாதைக்குத் திரும்பின.



காஸ்ட்ரோவை பாடிஸ்டா ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும், பின்னர் அவரது வேகத்தைக் கண்டு பயந்து, அவரைத் தீர்த்துக்கட்ட முனைந்தார். உத்வேகமில்லாத ஆயிரக்கணக்கான 'ஊழியர்'களைக்கொண்ட பாடிஸ்டாவின் ராணுவத்தை, வெறும் 135 வீரியமான வீரர்களைக்கொண்டு எதிர்த்துப் போராடினார் காஸ்ட்ரோ. இடையில் ஒரு முறை கைதான காஸ்ட்ரோவுக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றக் கூண்டில், பாடிஸ்டாவுக்கு எதிராகக் கர்ஜித்தார் காஸ்ட்ரோ! அந்த உரை, நாட்டு மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற, காஸ்ட்ரோவுக்காக ஆதரவுக் குரல்கள் ஆர்ப்பரித்தன. சிறைத் தண்டனையை ரத்து செய்து, காஸ்ட்ரோவை நாடு கடத்தினார் பாடிஸ்டா.

மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோவுடன் இணைந்துகொண்டார் சே குவேரா. காஸ்ட்ரோவின் கம்யூனிஸ காந்தமும், சே குவேராவின் கெரில்லா போர்த் திறமையும் ஒருவரையருவர் ஈர்த்து, இணைத்தன. 1956ல் 'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் 82 வீரர்களைத் திரட்டி, மீண்டும் பாடிஸ்டா ராணுவத்தைத் தாக்கி, ரத்த மயமாகச் சிதைத்தார் காஸ்ட்ரோ. மெதுமெதுவாக கியூபாவுக்குள் ஊடுருவி, தன்னைப் போல் புரட்சிகர எண்ணமுள்ள இளைஞர்களை இணைத்துக்கொண்டார். 1959ல் பாடிஸ்டாவிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ, அன்று முதல் இன்று வரை கியூபாவின் கிங்!



கியூபாவின் வளங்களை வசப்படுத்துவதற்காக பாடிஸ்டாவை ஊட்டமுடன் ஊக்கப்படுத்திய அமெரிக்காவைக் கண்டால், ஆரம்பத்திலிருந்தே காஸ்ட்ரோவுக்கு எரிச்சல்தான். 'கரைச்சல் பண்ணுவானோ' என்ற சந்தேகத்துடனேயே தன் நே(மோ)சக் கரத்தை அமெரிக்கா நீட்ட, எதிர்பார்த்தது போலவே எடக்கு பண்ண ஆரம்பித்தார் காஸ்ட்ரோ. அள்ள அள்ளக் குறையாத கியூபாவின் சர்க்கரையை, சல்லிசு விலையில் இனி அமெரிக்கா அள்ளிச் செல்ல முடியாது என்று அறிவித்தார். பதிலுக்கு கியூபாவில் இருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அந்தச் சமயம் வலுவான வல்லரசாக இருந்த சோவியத் யூனியன், காஸ்ட்ரோவுக்குக் கை கொடுத்தது. கம்யூனிசமும் அமெரிக்க எதிர்ப்பும் இருவரையும் இணைத்தன.

தனது எல்லையில் ரஷ்ய நிழல் படரவும், அரண்டு போன அமெரிக்கா, கியூபாவிடம் கொடுத்திருந்த 70 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியை ரத்து செய்தது. கியூபாவின் பொருளாதாரத்தைப் போட்டுத் தாக்குவது அமெரிக்காவின் திட்டம். ஆனால், அசரவில்லை காஸ்ட்ரோ! கியூபாவிலிருந்த அமெரிக்காவின் 850 மில்லியன் டாலர் சொத்துக்களை அரசுடைமையாக்கி, அதிர்ச்சி அணுகுண்டை வீசினார். 'போட்டுத்தள்ள வேண்டியது பொருளாதாரத்தை அல்ல; காஸ்ட்ரோவைத்தான்!' என்று அமெரிக்கா தீர்மானித்தது அப்போதுதான்!

'ஹவான்னா சுருட்டு'ப் பிரியர் காஸ்ட்ரோ. அவர் பிடிக்கும் சுருட்டில் வெடிகுண்டு செட் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. அவரைக் கொல்ல 1,400 பேருக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பிப் பார்த்தார்கள். நடக்கவில்லை. அவர் அணியும் 'ஸ்கூபா டைவிங் சூட்'டில் கொடிய நோய்க் கிருமிகளைத் தெளித்துப் பார்த்தார்கள். உணவுகளிலும், மாத்திரைகளிலும் விஷத்தைக் கலக்க முயன்றார்கள். காஸ்ட்ரோவின் தாடியில் உள்ள ஒற்றை முடியைக்கூடப் பொசுக்க முடியவில்லை அமெரிக்காவால்! காஸ்ட்ரோவின் முன்னாள் காதலியான மரிட்டா லோரென்ஸ், மீண்டும் காஸ்ட்ரோவைச் சந்தித்து, “நம் சந்தோஷத்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்'' என்றாள். அது விஷ ஐஸ்க்ரீம்! “ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நீ என்னைத் தாராளமாகச் சுட்டே கொன்றுவிடலாம்!” என்று சிரித்துக்கொண்டே அவளிடம் தன் துப்பாக்கியை நீட்டினார் காஸ்ட்ரோ. அவ்வளவுதான்... விதிர்விதிர்த்து, வெடவெடத்து காஸ்ட்ரோவின் காலடியில் சரண்டரானார் மரிட்டா. அமெரிக்காவின் இப்படியான கொலை முயற்சிகளை அடிப்படையாக வைத்து உருவான, 'காஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்' என்ற குறும்படம் படுபிரபலம்.

ஜனநாயகத்தை நசுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபாவில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் எல்லாம் பக்கா! காஸ்ட்ரோ பெயரில் கியூபாவில் வீதியோ, சிலையோ... ஏன், ஒரு கட்அவுட்கூடக் கிடையாது.

உடல் நிலை மோசமானதால் காஸ்ட்ரோ முழு ஓய்வு எடுப்பார் என்ற செய்தி வெளியானதும், 'அந்த நல்ல கடவுளுக்கு நன்றி! விரைவில் அவரை உலகத்திலிருந்து நீக்கிவிடுவார்!' என்று நாகூசாமல் சொன்னார், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.

'புஷ் நம்பும் அதே கடவுள்தான் என்னை 638 முறையும் காப்பாற்றியிருக்கிறார் என்பதை புஷ் மறந்துவிட வேண்டாம்!' என்று பதில் சொல்லியிருக்கிறார் பிடல் காஸ்ட்ரோ!

தற்போது கியூபாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆரம்ப காலம் முதல் அண்ணனுக்குத் தோள் கொடுத்த தோழன்.

''82 வீரர்களோடு எனது முதல் புரட்சியை ஆரம்பித்தேன். இப்போதென்றால் எனக்கு 10 அல்லது 15 வீரர்கள் போதும்! நீங்கள் எத்தனை சின்னவர்கள் என்பதல்ல விஷயம். உங்கள் அபார நம்பிக்கையும், நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியைத்தீர்மானிக்கும்!''

இதுதான் உலகத்துக்கு காஸ்ட்ரோவின் செய்தி!

Sunday, December 2, 2007

நாயகன் கார்ல் மார்க்ஸ்

வரலாற்றின் அதிசயம் என்றொரு சொல்வழக்கு இருக்கு மானால், அது முற்ற முழுக்கக் கார்ல் மார்க்ஸ§க்கே பொருந்தும். உலகின் தலைசிறந்த தத்துவம், தலைசிறந்த பொருளா-தாரம், தலைசிறந்த காதல், குடும்பம், என எண்ணற்ற தலைசிறந்தவற்றைத் தக்கவைத்துக்கொண்டு இருந்த அவரது வாழ்வு, தலைசிறந்த நட்புக்கும் அர்த்தம் எழுதியுள்ளது.
ஜென்னியைப் போலவே மார்க்ஸின் வாழ்க்கைக்குப் பெருமை கூட்டிய அந்த நண்பர் ப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்.




இருவரும் இருவேறு துருவங்கள் என்றாலும், இருவரும் ஒரு உடலின் அறிவும் இதயமும் போல பிரிக்க முடியாத சக்திகளாக இணைந்திருந்தனர். மார்க்ஸ், ஏங்கல்ஸின் கண்ணாக இருந்துள் ளார். ஏங்கல்ஸ் மார்க்ஸின் கைகளாகச் செயல்பட்டு இருக்கிறார்.

மார்க்ஸ் - அறிவு; ஏங்கல்ஸ் - அனுபவம்.

ஒருவர் எரிமலை; மற்றவர் பனிமலை.

மார்க்ஸை யாரும் சுலபத்தில் நெருங்க முடியாது. அசட்டுதனத்-துடன் யாரேனும் அருகில் போனால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அவர்களை அப்பால் தூக்கி வீசிவிடும். அதேசமயம் ஏங்கல்ஸின் அன்பு எத்தனை கொடியவரையும் அருகில் வரச்செய்து அரவணைத்-துக்கொள்ளும். மார்க்ஸ், சிந்தனையின் தொடர்ச்சியில் நெடுந் தூரம் நீந்தக்கூடி-யவர். ஏங்கல்ஸ் சட்டென முடிவெடுத்துச் செயலில் இறங்கக்கூடியவர்.





இந்த பாசிட்டிவ்வும் நெகட்டிவ்வும் இணைந்த தருணத்தில்தான் அதுவரை இருள-டர்ந்து கிடந்த உலகத் தொழி-லாளர்--களின் வாழ்வில் மார்க்ஸியம் எனும் பிரமாண்ட மின் சூரியன் உதய-மாகியது.

அந்த நட்புதான் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் முதற்கொண்டு இன்று உலகின் கடைக்-கோடி தொழிலாளிக்கும் தொழிலாளர் நல நிதி, மருத்துவ வசதி, போனஸ் போன்றவற்றைப் பெற்றுத் தந்திருக்கிறது.

அந்த நட்பின் வரலாறு எழுதப்-படுவதற்கு முந்தைய ஏங்கல்ஸின் கதை வீடற்று அலையும் ஒரு பறவையைப் போன்றது. அவரிடம் எண்ணற்ற புதிய கருத்துக்கள் இருந்தன. ஆனால், அவற்றைச் சுமந்துகொண்டு தனிய-ராகவே ஜெர்மன், பிரான்ஸ், லண்டன் என அலைந்துகொண்டு இருந்தார்.

சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவரான ஏங்கல்ஸ், மார்க்ஸ் பிறந்த அதே ரைன் மாகாணத்-தின் பார்மன் நகரத்தில், அவருக்கு இரண்டு வருடங்கள் கழித்து, 1820-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியன்று பிறந்தார். ஆச்சர்யம் என்னவென்-றால், அவரின் தந்தை லண்டனில் நெசவுத் தொழிற் சாலை ஒன்றில் பங்கு-தாரராக இருக்கும் பெரும் முதலாளி. கவிதை எழுதும் மனது காரணமாகவோ, அல்லது தொழி-லாளர்--களின் துயரங்களையும் அவர்-களுக்கு இழைக்கப்படும் அநீதி-களையும் அருகிலிருந்து பார்த்ததன் காரண-மாகவோ ஏங்கல்ஸ§க்குள் புதிய சமூக மாற்றங்களுக்கான நெருப்பு கொழுந்து-விட்டு எரியத் துவங்கியது.இக் கால-கட்டங்களில், பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு ஒரு நாள் வந்த போது, அங்கே அனைவரும் மார்க்ஸ் பற்றியும் அவரது சிந்தனை வேகத்தைப் பற்றியும் பரபரப்பாகப் பேசிக்கொண்டு இருந்ததைக் கேள்விப்பட்டார். ‘யார் இந்த கார்ல் மார்க்ஸ்? அவன் என்ன நம்மைவிட உண்மையாகவும் உயர் வாகவும் சிந்திக்கக்கூடியவனா? அவனைச் சந்திக்க வேண்-டுமே’ என இயல்பாக அவருக்குள் ஓர் எதிர்பார்ப்பு தோன்றியிருக்கிறது.



கொலோன் என்னும் இடத்-தில், ஒரு காபிக் கடையில் எதிர்-பாராமல் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ஆனால், சூழலின் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டு விலகிச் சென்றனர். அதன் பிறகுதான், நாம் ஏற்கெனவே குறிப்-பிட்டி-ருந்தபடி ரைன்லாந்து கெஜட் பத்திரிகையில் மார்க்ஸ் ஆசிரியராக இருந்தபோது, அதற்கு வந்த ஏங்கல்ஸின் கட்டுரைகளைப் படித்து வியந்திருக்கி-றார். இந்தச் சூழலில், ஏங்கல்ஸின் அப்பா, மகனது கம்யூனிச நடவடிக்கை-களின் காரணமாக கடும் கோபத்துக்கு ஆளாகி, ஒழுங்காகத் தொழிலைக் கவனிக்-கும்படி மகனைக் கண்டிக்க, வேறு வழியில்லாமல் வேதனையோடு லண்டன் தொழிற்சாலைக்குச் சென்றார் ஏங்கல்ஸ். தன் கொள்கை-களுக்கேற்ப தன்னால் சுதந்-திர-மாகச் செயல்பட முடிய-வில்லையே என்னும் வருத்தம் ஏங்கல்ஸ§க்கு அதிகரித்தது.

இக் காலகட்டத்தில்தான் மார்க்ஸ் புது மனைவி-யுடன் புறப்பட்டு பாரீ ஸ§க்குப் பிழைப்புத் தேடி வந்திருந்தார்.
எண் 38, வன்னியே எனும் வீதியில் வசித்து வந்த அறிவுச்-சிங்கத்திடம், ரூஜ் என்கிற நண்பன், தான் ஒரு பத்தி-ரிகை நடத்தப்போவதாகச் சொல்லி-யிருந்தான். .அதன்படி, அவன் மார்க்ஸை ஆசிரியராகக் கொண்டு ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிகையைக் கொண்டு வந்தான். ஆனால், மார்க்ஸ§க்கு உரிய சம்பளம் தராமல் ஏமாற்றியதோடு, ‘வேண்டு-மானால் நீயே இந்தப் பத்திரிகைகளைக் கொண்டு போய் விற்றுச் சம்பாதித்துக் கொள்’ என்று சொல்லிவிட் டான். மார்க்ஸ§க்கு வேதனை தாங்க முடியவில்லை. கர்ப்பிணி யாக இருந்த தன் மனைவியிடம் ‘எப்படியும் பணம் வந்துவிடும். நாம் சந்தோஷ-மாக இருப்போம்’ என வாக்களித்துவிட்டு வந்தி-ருந்-தார். அந்த ஆத்திரத்தில் ரூஜை கடுமை-யாகத் திட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

1944, மே 1. எண் 38, வன்னியே வீட்டில் ஒரு பெண் குழந்தை-யின் சத்தம் கேட்டது. குழந்தையின் மழலையில் மார்க்ஸ§ம் ஜென்னியும், சூழ்ந்திருந்த வறு-மையை மறந்து சந்தோஷத்-துடன் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தனர். இதனிடையில், ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ பத்திரிகை, மார்க்ஸ் நினைத்ததைவிட ஆட்சி-யாளர்களி டையே கடும் கோபத்-தையும் கொந்த-ளிப்பையும் உருவாக்கி-யிருந்தது. அதில் ஏங்கல்ஸ் எழுதியிருந்த பொரு ளாதாரக் கட்டுரை மார்க்ஸ§க்கு அதிகம் பிடித்-திருந்தது. பின்னா-ளில் மார்க்ஸ் இக்கட்டுரை குறித்துப் பல இடங்களில் மேற்-கோள் -காட்டி எழுதி இருக்கிறார்.
இந்தச் சூழலில்தான், ஏங்கல்ஸ் லண்டனி-லிருந்து தனது சொந்த ஊரான பார்மனுக்குப் போகும் வழியில், சட்டென யோசனை வந்த வராக பாரீஸில் இறங்கியிருக்கிறார். தனது கட்டுரைக்கு எந்த மாதிரியான எதிர்விளைவு என்பதைத் தெரிந்துகொள்வ தற்கும், தன்னைப் போலல்லாமல் கொள்கைக் காக வாழ்க்கை-யையே அடகு வைத்து வாழும் மார்க்ஸை சந்திப்-பதற்காகவுமே தனது பயணத் திலிருந்து பாதியில் இறங்கியிருக்கிறார்.

அதுநாள் வரை எங்கெங்கோ அலைந்த அந்த இரு துருவங்களும் நேர்க்கோட்டில் சந்திப்பதன் மூலம் உலக வரலாறு தன்னைத் திருத்திக்கொள்ளப் -போவ-தையும், அதில் தனக்கும் முக்கிய பங்கிருப்பதையும் அறியாத 1944-ன் ஆகஸ்ட் மாத இறுதி நாளன்றில், மார்க்ஸ§ம் ஏங்கல்ஸ§ம் கைகுலுக்கிக்கொண் டனர். முந்தைய சந்திப்பைப் போலில்லா-மல் இம்முறை ஒருவரை ஒருவர் முழுமை--யாக அறிந்திருந்தனர்.

மார்க்ஸின் எழுச்சி மிக்க அறிவும் ஆய்வும் அதற்கான தியாகங்களும் ஏங்கல்ஸைக் கட்டிப்போட்டன. பொருளா-தாரத்தின் மீதான ஏங்கல்ஸின் மதிநுட்பம் மார்க்ஸை வசீகரித்-திருந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் பாரீஸில் தங்கியிருந்து மார்க்ஸ§டன் விவாதித்த ஏங்கல்ஸின் கண் முன்னே சுரண்டலற்ற புதிய உலகம் விரியத் துவங்கியது.அவரின் காதுகளில் தொழிலாளர்களின் விடுதலைப் பாடல்-கள் ரீங்கரித்தன. அதுவரை சிந்தனை தளத்தில் மட்டுமே இயங்கி வந்த மார்க்ஸை ஏங்கல்ஸின் வார்த்தைகள், செயலில் உடனடியாக இறங்-கும்-படி கட்டளை இட்டன.

அக் காலகட்டத்தில், பிரான்ஸில் இரண்டு பிரச்னைகள் இருந்தன. முதலா-வது போலி கம்யூனிஸ்ட்டு-களுடையது. இவர்களில் பலர் புரட்சி, புரட்சி என வாய் கிழியப் பேசிவிட்டு அழுக்கு உடை-களுடன் வரும் தொழிலாளி-களைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிக்-கொள்ப-வர்கள். மார்க்ஸ் இவர்-களைத் தனது கட்டுரைகளின் மூலமாகவும், கூட்டங்-களிலும் ஓட ஓட விரட்டியடித்தார்.

இன்னொரு பிரச்னை தொழி-லாளர்-களுடையது. அக் கால-கட்டத்-தில் பிரான்ஸில் பிரெஞ்சு தொழி-லாளர்-களுடன் ஜெர்மனியைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒன்றாகப் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து-கொண்-டால் எங்கே அது தங்க-ளுக்குப் பெரும் ஆபத்தாகி-விடுமோ என்று பயந்த முதலாளி-கள், இரு பிரிவினருக்குள்ளும் கலகம் ஏற்படுத்தி, மோதவிட்டுக் குளிர்காய்ந் தனர். அது மட்டு-மின்றி தொழிலாளர்களிடம் அதிக உழைப்பைச் சுரண்டி, குறைந்த ஊதியம் தந்தனர்.

‘உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனை-வரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும்’ என மார்க்ஸ் ஆணித்தரமாகக் கூறிய-தோடு நில்லாமல், அவர்-களை ஒன்று சேர்க்கும் முயற்சி-யிலும் இறங்கினார். இது தொடர்பாக தனது எண்ணங்-களை வெளி-யிட அவருக்கு ஒரு பத்திரிகை தேவையாக இருந்-தது. நண்பர்-கள் ஒன்றிணைந்து ஒரு இதழ் துவக்கினர். அதன் பெயர் ‘முன்னேற்றம்’.

புதிதாக உதித்த முன்னேற்றம் பத்திரிகையில் மார்க்ஸின் கட்டுரைகள் வெளியாகத் துவங்கின. அதுவரை அடக்கி-வைத்திருந்த கோபங்கள் மார்க்-ஸிடமிருந்து ஏவுகணை வார்த்தைகளாக சீறிப்பாய்ந்து ஆட்சியாளர்களைத் துவம்சம் செய்தன. அவரது கட்டுரைகள் மக்களையும் தொழி-லாளர்களையும் புரட்சிப் பாதைக்கு வரச்சொல்லி அறைகூவல் விடுத்-தன. ஜெர்மானிய மன்னர் நான்காம் ப்ரெட்ரிக்கை ‘பிற்போக்கின் மேலான பிரதிநிதி’ என பிடறியில் அடித்தார் மார்க்ஸ். மக்க-ளிடையே செல்வாக்கு எழுந்தது. தொழிலாளர்கள் விடி-வெள்ளி-யாக மார்க்ஸைக் கொண்டா-டி மகிழ்ந்தனர்.
ஜெர்மன் அரசு துள்ளிக் குதித்தது.பிரெஞ்சு அரசாங்கத்திடம் மார்க்ஸை யும் கூட்டாளிகளையும் நாடு-கடத்தும்படி வேண்டியது.

1845 ஜனவரி 11-ம் தேதி, பிரான்ஸில் ‘முன்னேற்றம்’ தடை செய்யப்பட்டது.

மற்றவர்கள் மன்னிக்கப்பட, மார்க்ஸ் மட்டும் இலக்கானார். காவலர்களால் சுற்றிவளைக்கப்பட்ட மார்க்ஸ், அடுத்த 24 மணி நேரத்துக்-குள் -பிரான்ஸை விட்டு வெளி-யேறும்படி எச்சரிக்கப்பட்டார். வீட்டுக்குச் சென்று மனைவியிடம் சொல்லக்கூட அனுமதி மறுக்கப் பட்டது.

ஆனால், ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் அப்போது அவருக்குத் தரப்-பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லி-விட்டால் போதும், எப்-போதும்போல் அவர் பிரான்ஸிலேயே அமைதி-யாக குடும்பம் நடத்தலாம். எந்தத் தடையும் இல்லை.

அவர்கள் கேட்ட அந்த வார்த்தை - மன்னிப்பு!

--------------------
From Vikatan.com

Saturday, November 3, 2007

சே குவாரா - Real HERO











அங்குலம் அங்குலமாய் அசிங்கங்களை அள்ளித் தெளித்துவிட்டு அதன் இறுதி வரிகளில் மட்டும் ‘அறிவுரைகளை’ அள்ளி வீச… இது ஒரு நடிகையின் கதை அல்ல.‘அதற்கு பதிலளிக்கிறேன் பார்’ என்ற போர்வையில் ‘பத்திரிகையாளர்கள் அனைவருமே மோசம். அவன் மனைவி, மக்கள் கூட மார்க்கம் தவறித்தான் வாழ்வார்கள்’ என நடிகை ரேவதி உளறிக் கொட்டிய ‘ஒரு பத்திரிகையாளனின் கதை’யும் அல்ல.இது மக்களுக்காகவே வாழ்ந்து,மக்களுக்காகவே வீழ்ந்த ஒரு புரட்சியாளனின் கதை.அவன் பெயர் குவேரா.


புரட்சிக்கு இன்னொரு பெயர் சூட்டலாம் என்று எவராவது எண்ணினால் கூச்சமின்றி கூப்பிடலாம் குவேரா என்று.


ஆசிய நாடுகள் என்றாலே இந்தியா - இலங்கை - பாகிஸ்தான் என இங்கிருப்பதைப் போல லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் பெரு - பிரேசில் - மெக்ஸிகோ - என பலவற்றைச் சொல்லலாம். அவற்றுள் ஓர் அரிய தேசம்தான் அர்ஜன்டைனா. அங்குதான் குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்டது.ஆம், அதுதான் அவன் பிறந்த மண்.அப்போது நாள்காட்டி ஜுன் 14 - 1928 என்று அறிவித்தது.அவன் வளர்ந்த பொழுதுகளை அருகிருந்து ரசித்தவர்கள் குறும்புக்கு இன்னொரு பெயரும் குவேரா தான் என்று அடித்துச் சொல்வார்கள்.அவன் வளர வளர குறும்போடு சேர்ந்து கூடவே வளர்ந்தது அவனது அறிவு மட்டுமில்லை அளவிடற்கரிய அவனது மனிதநேயமும்.ரப்பர் மிதவைகளைத் தூக்கி ஆற்றில் போடுவான். தாவிக் குதித்த பிறகு தொடங்கும் அவனது பயணம் 100 - 150 மைல்கள் என. பத்து பதினைந்து நாட்கள் கழித்தே வீடு வந்து சேருவான்.இன்றோ… நாளையோ… இறுதி மூச்சையும் விட்டுவிடும் அந்த லுானா… அதையும் விடமாட்டான். அதில் ஏறிக்கொண்டு ஐநூறோ அறுநூறோ மைல்கள் பயணம் செய்த பிறகே அவன் மனம் அமைதிப்படும். போகிற வழியெல்லாம் தென்படும் மக்களது வாழ்க்கை முறைகளையும், அவர்கள் சுமந்த கணக்கிலடங்கா சோகங்களையும் கணக்கிட்டுக் கொண்டே வீடு திரும்புவான்.அந்த அர்ஜன்டைனா நாடு அவனையும் ஒரு மருத்துவனென்று சான்றளித்தபோது நாட்காட்டி மார்ச் 7, 1953 என்று அறிவித்தது.




மருத்துவரென்றால் பத்தாவது பெயிலாகிவிட்டு போலிப்பத்திரம் தயாரித்து வாழ்ந்த மருத்துவனல்ல.மருத்துவரென்றால்…‘எக்ஸ்ரேவுக்கு இத்தனையாகும்,ஸ்கேனிங்குக்கு அத்தனையாகும்எல்லாம் சேர்த்து மொத்தம் உன் சொத்தில் பாதி கட்டணமாகும்’ என உயிர்வாங்கும் மருத்துவனல்ல.அவன் உயிர் கொடுக்கும் மருத்துவனாகவே மலர்ந்தான்.மருந்துப்பைகளைத் தனது தோளில் சுமந்தபடி கொலம்பியா, வெனிசுலா எனும் துார தேசங்களிலிருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புகளைத் தேடிச் சென்றான் மருத்துவம் பார்க்க.கடமைக்கும், வியாபாரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த மருத்துவன் அவன்.இப்படிப் பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்பட்ட குவேரா மெக்ஸிகோ நாடு வந்து சேர்ந்தபோதுதான் எதிர்காலம் அவன் எதிர்பாராத வேலைகளை அவனுக்காக வைத்துக் கொண்டு காத்திருப்பது புரிய வந்தது. அவன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பல்வேறு சம்பவங்கள் சங்கமித்த மண்தான் மெக்ஸிகோ.அங்குதான் அவன் நாற்பதாண்டுகளாய் நகர்த்த முடியாத நாயகனாய் கியூபா நாட்டின் பிரதமராகவும், புரட்சியின் பிதாமகராகவும் வீற்றிருக்கிற பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தான்.அப்போது நாட்காட்டி ஜுலை 14, 1955 என்று அறிவித்தது.மருத்துவராய் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட குவேராவும் புரட்சியாளனாய் கியூபா நாட்டிலிருந்து வெளியேறிய பிடல் காஸ்ட்ரோவும் மெக்ஸிகோ நாட்டில் தான் அறிமுகமாகிறார்கள்.விடிய விடிய நடக்கிறது விவாதங்கள்.ஆனால், விடிந்த பிறகே விளங்குகிறது பிடலுக்கு… அந்த 27 வயது மருத்துவனும் கியூபா நாட்டு விடுதலைக்காகவீர சபதமேற்று தன்னோடு பயணப்பட்டுவிட்டான் என்பது.கப்பலில் பயணப்பட்டவர்கள் கரை இறங்கியபோது எதிர்கொண்டு அழைத்தது ஏவுகணைகளும்எதிரிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும்தான்.தப்பித் பிழைத்த அவர்களை தாவி அணைத்துக் கொள்கிறது கியூபக்காடுகளும் மலை முகடுகளும்.அப்போதுதான் ‘இனி தன் தோள்கள் சுமக்க வேண்டியது மருந்துப் பையை அல்ல. படைகளைச் சிதற அடிக்கும் துப்பாக்கியை’ என உணர்கிறான்.படை மருத்துவன் படைத் தளபதியாய் பரிணாமம் பெற்ற நாற்பத்தி எட்டே மாதங்களில் பறந்தோடுகிறான் எதிரி.விடுதலை கீதம் கியூப மண்ணில் இசைப்படும்போது…பிப்ரவரி 16, 1959 என்று அறிவிக்கிறது நாட்காட்டி…பிரதமராகிறார் பிடல்.

எந்த நாட்டிலோ பிறந்து இந்த நாட்டுக்காக உழைத்த அந்த இளைஞனுக்கு நன்றி செலுத்துகிறது நாடே. அவனை வாழ்த்தும் விதமாக கியூபா மக்கள் சே என்று செல்லப் பெயர் சூட்டி குதூகலிக்கிறார்கள்.குவேரா எனும் பெயரோடு ‘சே’வும் சேர்ந்து கொள்ள சேகுவேரா என புதுப்பெயர் பெறுகிறான் அந்த இளைஞன்.அந்நிய மண்ணில் பிறந்திருந்தாலும்தங்களுடையதை கண்ணியமிக்க மண்ணாக்கிக் காட்டிய இளைஞனை கியூப நாட்டினுடைய தேசிய வங்கியின் தலைவராக்குகின்றனர்.மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.அதை ஒன்று மட்டும் உறுத்தலோடுஉற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ருபாய் நோட்டுக்களில் ‘சே’ எனும் தனது செல்லப் பெயரை கையெழுத்தாக இடுகிறார் சேகுவேரா.அடுத்து அந்நாட்டின் தொழில்துறை தலைவராக்குகின்றனர் குவேராவை.மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.அதை ஒன்று மட்டும் உறுத்தலோடுஉற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.புதிய பொறுப்பேற்றுக் கொண்டவுடன் உள்ளுர் தொழில்களை ஊக்குவிக்கும் முகமாக அந்நிய நாட்டு கொள்ளை நிறுவனங்களுக்கு அழகிய பூட்டுகளை அனுப்பி வைக்கிறார் சேகுவேரா.அதை ஒன்று மட்டும் உறுத்தலோடுஉற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.அடுத்தடுத்து அநேக சீர்த்திருத்தங்கள்,அதற்கிடையே திடீர் திடீர் தலைமறைவு.இதுதான் சேகுவேராவின் தொட்டில் பழக்கம்.முதல் முறையாக அவர் தலைமறைவானபோது –சேகுவேராவின் கதையை முடித்துவிட்டார் பிடல் காஸ்ட்ரோ என முதல் பக்க தலைப்புச் செய்திகள்.மறுப்பார் பிடல்.மீண்டும் வருவார் சேகுவேரா.நாட்டின் எல்லையிலிருக்கும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களோடு அத்தனை நாளும் பணியாற்றிவிட்டு.மறுபடியும் தலைமறைவு.‘கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்’ என அலறும் முதல் பக்கச் செய்திகள்.மறுப்பார் பிடல்.மீண்டும் வருவார் சேகுவேரா.சுரங்கத் தொழிலாளர்களின் தோழனாகச் சில காலம் பணிபுரிந்து விட்டு.மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.அதை ஒன்று மட்டும் உறுத்தலோடுஉற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.திடீரென ஒருநாள் மீண்டும் தலைமறைவு.ஆனால் இந்த முறை தனது தோழன் பிடலுக்கு ஒரு நெஞ்சுருகும் மடல் ஒன்றை காணிக்கையாக்கிவிட்டு காணாமல் போகிறார்.




அயோக்கியர்களால் அல்லல் படும் இன்னொரு தேசத்திற்கு எனது தோள்கள் தேவைப்படுகிறதாம். எனவே பயணப்படுகிறேன். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் நம் கியூப மக்களை.வெற்றி நமதே’ என்கிறது அக்கடிதம்.தொழில் அமைச்சர் பதவியோ,தேசிய வங்கியின் தலைவர் பதவியோ எதுவுமே அவருக்குப் பொருட்டில்லை. விடுதலைக்கு ஏங்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காக போராடுவதே அவர் நேசித்த பெரிய பதவி.அதை ஒன்று மட்டும் உறுத்தலோடுஉற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.தனது பதவி விலகல் கடிதங்களை பிடலுக்கு அனுப்பிவிட்டு மாறுவேடத்தில் அவர் பயணப்பட்ட மண்தான் பொலிவியா.அங்குள்ள உழைக்கும் மக்களது உன்னதப் போராட்டத்தில் சேகுவேரா தன்னையும் இணைத்துக் கொள்ளும்போது…நாட்காட்டி நவம்பர் 4, 1966 என்று அறிவிக்கிறது.‘இங்குள்ள போராட்டக்காரர்களுக்கு எப்படித் தெரிந்தது இத்தனை வித்தைகள்’ என விவரம் புரியாமல் வியக்கிறது பொலிவிய அரசு.ஆனால்ஒன்று மட்டும் அதை உறுத்தலோடுஉற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.போராளிகளின் விதவிதமான தாக்குதல்கள் தொடரத்தொடர தலைசுற்றுகிறது பொலிவியப் படைகளுக்கு.ஆனால்ஒன்று மட்டும் அதை உறுத்தலோடுஉற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.அலறுகிறது அரசு தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல். உற்று நோக்கிக்கொண்டிருந்த அது அருகில் வந்து ஆறுதல் சொல்கிறது. அந்த அற்புதமான வீரனை வீழ்த்த ஆயுதமும் கொடுக்கிறது.கியூபா மலைகளில் துவங்கிய யுத்தம் பொலிவியக் காடுகளில் தொடர்கிறது.உறுத்தலோடு உற்று நோக்கிக் கொண்டிருந்த அது மெல்ல மெல்ல அந்த மாமனிதனை நெருங்குகிறது.

ஒரு அதிகாலைப் பொழுதில் பெரும்படையோடு அந்தப் புரட்சிக்காரன் ஆஸ்த்துமா தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த வேளையில் சுற்றிவளைத்துக் கைது செய்கிறது அது.சேகுவேரா கைதான செய்தி எப்படியோ கசிந்துவிட… எட்டுத்திக்கும் செய்தி பறக்கிறது. அவரை விடுவிக்க கோரி மாபெரும் அறிஞர்களும், லட்சக்கணக்கான மக்களும் பங்கு கொண்ட பேரணி லண்டனில் நடக்கிறது.‘சேகுவேராவை எதுவும் செய்துவிட வேண்டாம்’ என எழுந்த லட்சக்கணக்கானவர்களின் குரல்களை ஏளனம் செய்தபடி ‘அது’ தனது துப்பாக்கியின் திசையை சேகுவேராவை நோக்கி திருப்புகிறதுதுப்பாக்கியின் விசையை அழுத்தப்போகும் வேளையில்‘ஒரு நிமிடம்…’ என்கிறார் சேகுவேரா.சுடுவதை தாமதிக்கிறது அது.இறந்து விடுவோம் என்பது உறுதியாகிவிட்ட வேளையில் அந்த இனியவனின் இதயத்திலிருந்து எழுந்த இறுதி வரிகள் இதுதான்…“எனது தோழன் பிடலிடம் சொல்…எனது மரணத்தால் புரட்சியை ஒருக்காலும் ஒடுக்கிவிட முடியாது என்று. அவரைத் தொடர்ந்து போராடச் சொல்.என் மனைவி ஹில்டாவிடம் மறுமணம் செய்து கொள்ளச் சொல்.உனது குறி சரியாக இல்லை நேராக எனது நெற்றியைக் குறி பார்.”குரூரத்துடன் அது விசையைத் தட்டுகிறது.அந்த மாவீரன் பொலிவிய மண்ணில் வீழ்கிறான்.அப்போது நாட்காட்டி அக்டோபர் 9, 1967 என அறிவிக்கிறது.







எது அந்த ‘அது’?உலக மக்களின் கூக்குரலை உதாசீனப்படுத்திய ‘அது’ எது?அதுதான்: அமெரிக்கா.மற்றும் அதனுடைய உளவுக்கும்பல்.

அன்புத்தோழி,அம்மாவீரன் இறந்து முப்பது ஆண்டுகள் கழித்து இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. இத்தனை ஆண்டுகளாக சிக்காமலிருந்த அப்புரட்சியாளனது எலும்புக்கூடு கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டியெடுக்கப்பட்டது.தனது தோழனின் எலும்புக்கூட்டை இன்றைக்கும் கியூபாவினது பிரதமராக இருக்கின்ற பிடல் காஸ்ட்ரோ பெற்றுக்கொண்டு சேகுவேராவின் மகளிடம் ஒப்படைத்தபோது அவர் சொன்னது:‘மீண்டும் மாவீரனாக அவர் திரும்பி வந்திருக்கிறார்’இனிய தோழி,இங்கு சாதிச் சண்டைகளிலும்,மதப் பாகுபாடுகளிலும்,எல்லைச் சண்டைகளிலும் எண்ணற்ற ‘மனிதர்கள்’தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்க…நமது புரட்சியாளனோ எந்த மண்ணிலோ பிறந்துஎந்த மண்ணிலோ போராடி எந்த மண்ணிலோ உதிர்ந்தவன்.ஆம் தோழி,நமது சேகுவேரா வாழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர், வீழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர்.புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லைவிதைக்கப்படுகிறார்கள்.
தோழமையுடன்,

பாமரன். (http://www.orkut.com/Profile.aspx?uid=8201301087009048135)


to read in English http://www.gnosticliberationfront.com/Che%20Guevara.htm